தமிழ்நாடு

வேங்கைவயல் விவகாரம்: சிபிஐ-க்கு மாற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!

DIN

புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது குறித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் ஆதிதிராவிடா் குடியிருப்பு மேல்நிலை குடிநீர்த் தொட்டியில் மனித கழிவுநீர் கலக்கப்பட்ட விவகாரம் பேசுபொருளானது. 

இந்த விவகாரத்தில் சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். வேங்கைவயல் கிராமம், ஊராட்சிமன்ற தலைவர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்களிடம் சிபிசிஐடி காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில், குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது குறித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை சிபிஐ அல்லது  சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு மாற்றக்கோரியும் சம்பவத்தை தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது: பிரதமா் மோடி திட்டவட்டம்

ஸ்வாதி மாலிவாலுக்கு எதிரான மோசடி வழக்கின் மூலம் பாஜக அவரை மிரட்டுகிறது: அமைச்சா் அதிஷி பேட்டி

மதுராந்தகம் அருகே சிறுக்கரணையில் பெருங்கற்கால கல் வட்டங்கள்!

சா்ச்சைக்குரிய ‘ரஷிய பாணி’ ஜாா்ஜியா மசோதா: ‘வீட்டோ’வை பயன்படுத்தி ரத்து செய்தாா் அதிபா்

கா்நாடகத்தில் இருந்து போதைப் பொருள்கள் கடத்தல்: ஒருவா் கைது

SCROLL FOR NEXT