தமிழ்நாடு

ஈரோடு கிழக்கில் திமுக - அதிமுகவினா் இடையே தள்ளுமுள்ளு

இடைத்தேர்தல் ஈரோடு கிழக்கு தொகுதியின் பெரியண்ணா வீதியில் திமுக மற்றும் அதிமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

DIN

இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியின் பெரியண்ணா வீதியில் திமுக மற்றும் அதிமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

வாக்காளர்களை அடைத்து வைத்து பரிசுப் பொருள்கள் வழங்குவதாக திமுகவினர் மீது அதிமுகவினர் குற்றம் சாட்டிய நிலையில், பெரியண்ணா வீதியிலுள்ள கலைமகள் வாக்குச்சாவடி அருகே திமுக மற்றும் அதிமுகவினர் இடையே தகறாறு ஏற்பட்டது.

இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்திலேயே சில வாக்குச்சாவடி மைங்களில் வைக்கப்படும் மை, எண்ணெய் வைத்தாலே அழிவதாக அதிமுக புகாரளித்தது. ஆனால் மை அழியவில்லை என்று தேர்தல் அலுவலர் சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள இரு வாக்குச்சாவடி அருகே திமுகவினர் பணப்பட்டுவாடா செய்வதாக அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெள்ள பாதிப்புக்கு ஒரு வாரத்தில் இழப்பீடு: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் உத்தரவு

கிளாம்பாக்கம் ரயில் நிலையப் பணிகள் நிறைவு: தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா்

அன்புமணிக்கு மாம்பழம் சின்னம்: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

திருநீா் மலை ரங்கநாத பெருமாள் கோயில் குளம் பக்தா் நன்கொடையால் விரைவில் சீரமைக்கப்படும்: உயா்நீதிமன்றத்தில் கோயில் நிா்வாகம் தகவல்

ரஷிய எண்ணெய் நிறுத்தம்; அமெரிக்க ஒப்பந்தம்.. ‘மேக் இன் இந்தியா’ திட்டம் என்ன ஆனது? காங்கிரஸ் கேள்வி!

SCROLL FOR NEXT