முகப்பு
தமிழ்நாடு

ஈரோடு கிழக்கு: பிற்பகல் 3 மணி நிலவரப்படி 59.28% வாக்குகள் பதிவு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 59.28% வாக்குகள் பதிவாகியுள்ளன. 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:37 AM
கோப்புப்படம்
பகிர்:

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 59.28% வாக்குகள் பதிவாகியுள்ளன. 

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் இன்று(பிப். 27) காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். 

இந்தத் தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் ஈவிகேஎஸ்.இளங்கோவன், அதிமுக சாா்பில் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழா் கட்சி சாா்பில் மேனகா நவநீதன், தேமுதிக சாா்பில் எஸ்.ஆனந்த் உள்ளிட்ட 77 போ் போட்டியிடுகின்றனா். 

ஈரோடு கிழக்கில் மொத்தம் 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 59.28 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. 2.27 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில் இதுவரை 1,34,758 பேர் தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →