தமிழகத்தில் 3 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு! 
தமிழ்நாடு

தமிழகத்தில் 3 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் 3 நாள்களுக்கு மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

DIN

தமிழகத்தில் 3 நாள்களுக்கு மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில், 

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 

இன்று முதல் ஜன.8 வரை...  தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 

வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளைகளில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. 

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கான வானிலை முன்னறிப்பு

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். 
அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கு..

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் வடகிழக்கு/கிழக்கு திசையில் இருந்து பலத்த காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் எனவே இன்றும், நாளையும் மீனவர்கள் 
கடலுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்னும் 100 நாள்களில் வெளியாகும் பராசக்தி - புது போஸ்டர் வெளியீடு!

கரூர் பலி: காவல்துறைக்கு நன்றி சொல்ல வேண்டும்! - கமல்ஹாசன்

உங்கள் குழந்தைக்கு இருமல் மருந்து கொடுக்கிறீர்களா? ஜாக்கிரதை!

கரூர் பலி: சம்பவ இடத்தில் Kamal ஆய்வு

நவரசம்... பாயல் ராஜ்பூத்!

SCROLL FOR NEXT