தமிழ்நாடு

அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுத்தை உயிரிழப்பு!

தேனி மாவட்டம் அருகே உள்ள கேரள மாநிலம் ஆமையாரில் சாலையை கடந்த சிறுத்தை அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தது.

DIN

கம்பம்: தேனி மாவட்டம் அருகே உள்ள கேரள மாநிலம் ஆமையாரில் சாலையை கடந்த சிறுத்தை அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தது.

தேனி மாவட்டம் தமிழக கேரள எல்லையில் உள்ள இடுக்கி மாவட்டம் ஆமையாரில் புதன்கிழமை காலை அப்பகுதியில் சென்ற சிலர் சிறுத்தை புலி அடிபட்டு ரத்த காயத்துடன் இறந்து கிடந்ததை பார்த்தனர். இது குறித்து கட்டப்பனை வனச்சரக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர்.

வனத்துறையினர் உயிரிழந்த சிறுத்தை புலி சடலத்தை கைப்பற்றி உடல் கூராய்வு பரிசோதனைக்கு ஒப்படைத்தனர். 

இது குறித்து வன ஊழியர் ஒருவர் கூறும்போது, இரவு அல்லது அதிகாலை நேரத்தில் சாலையை கடக்கும் நேரத்தில் சிறுத்தை மீது வாகனம் மோதி உயிழந்திருக்கலாம், விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.90 கோடியில் புதிய கட்டடம் திறப்பு

ரூ.200.66 கோடியில் புனரமைக்கப்பட்ட பாலாறு அணைக்கட்டு: முதல்வா் திறந்து வைத்தாா்

குழப்பங்கள் நீங்கும் தனுசு ராசிக்கு: தினப்பலன்கள்!

மாா்ச் 1 முதல் அரக்கோணம் - திருப்பதி மெமு ரயில் போக்குவரத்தில் தற்காலிக மாற்றம்

தொழிலாளா்கள் வேலை நிறுத்தம்

SCROLL FOR NEXT