தமிழ்நாடு

அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுத்தை உயிரிழப்பு!

தேனி மாவட்டம் அருகே உள்ள கேரள மாநிலம் ஆமையாரில் சாலையை கடந்த சிறுத்தை அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தது.

DIN

கம்பம்: தேனி மாவட்டம் அருகே உள்ள கேரள மாநிலம் ஆமையாரில் சாலையை கடந்த சிறுத்தை அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தது.

தேனி மாவட்டம் தமிழக கேரள எல்லையில் உள்ள இடுக்கி மாவட்டம் ஆமையாரில் புதன்கிழமை காலை அப்பகுதியில் சென்ற சிலர் சிறுத்தை புலி அடிபட்டு ரத்த காயத்துடன் இறந்து கிடந்ததை பார்த்தனர். இது குறித்து கட்டப்பனை வனச்சரக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர்.

வனத்துறையினர் உயிரிழந்த சிறுத்தை புலி சடலத்தை கைப்பற்றி உடல் கூராய்வு பரிசோதனைக்கு ஒப்படைத்தனர். 

இது குறித்து வன ஊழியர் ஒருவர் கூறும்போது, இரவு அல்லது அதிகாலை நேரத்தில் சாலையை கடக்கும் நேரத்தில் சிறுத்தை மீது வாகனம் மோதி உயிழந்திருக்கலாம், விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேர்தல் ஆணையத்தின் இதே செயல்பாடு தொடர்ந்தால் ஜனநாயகத்துக்கு பேராபத்து! -சுதர்சன் ரெட்டி

இந்தியாவுடனான வணிகம் ஒருதலைபட்சமான பேரழிவு: டிரம்ப்

நான் மெஸ்ஸி கிடையாது..! தங்கப்பந்து விருது வென்ற ரோட்ரி பேட்டி!

வாக்குத் திருட்டு: பிரதமர் மோடி வெளியே முகம் காட்ட தயங்கும் நிலைமை விரைவில் ஏற்படும்! -ராகுல் காந்தி

2,900 யூனிட் இ-விட்டாரா கார்களை ஏற்றுமதி செய்த மாருதி சுசுகி!

SCROLL FOR NEXT