தமிழ்நாடு

அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுத்தை உயிரிழப்பு!

DIN

கம்பம்: தேனி மாவட்டம் அருகே உள்ள கேரள மாநிலம் ஆமையாரில் சாலையை கடந்த சிறுத்தை அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தது.

தேனி மாவட்டம் தமிழக கேரள எல்லையில் உள்ள இடுக்கி மாவட்டம் ஆமையாரில் புதன்கிழமை காலை அப்பகுதியில் சென்ற சிலர் சிறுத்தை புலி அடிபட்டு ரத்த காயத்துடன் இறந்து கிடந்ததை பார்த்தனர். இது குறித்து கட்டப்பனை வனச்சரக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர்.

வனத்துறையினர் உயிரிழந்த சிறுத்தை புலி சடலத்தை கைப்பற்றி உடல் கூராய்வு பரிசோதனைக்கு ஒப்படைத்தனர். 

இது குறித்து வன ஊழியர் ஒருவர் கூறும்போது, இரவு அல்லது அதிகாலை நேரத்தில் சாலையை கடக்கும் நேரத்தில் சிறுத்தை மீது வாகனம் மோதி உயிழந்திருக்கலாம், விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT