முகப்பு
தமிழ்நாடு

அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு: நாளை(ஜன. 15) டாஸ்மாக் கடைகள் மூடல்!

அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதையொட்டி நாளை(ஜன. 15) டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:43 PM
ராஜஸ்தான் மக்களின் புத்தாண்டு கொண்டாட்டம்
பகிர்:

அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதையொட்டி நாளை(ஜன. 15) டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

மதுரை அவனியாபுரத்தில் தைப் பொங்கலன்று (ஜன. 15) ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியை மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் பொறுப்பேற்று நடத்துகிறது.

வாடிவாசல், விழா மேடை, பார்வையாளர் மேடை, தடுப்பு வேலிகள், கால்நடை பராமரிப்பு சோதனை மையம், மாடுபிடி வீரர்கள் சோதனை மையம், மாடுகள் சேகரிக்கும் இடம் உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

இந்நிலையில் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதையொட்டி நாளை(ஜன. 15) டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

அவனியாபுரத்தைத் தொடர்ந்து பாலமேட்டில் ஜன.16-ம் தேதியும், அலங்காநல்லூரில் 17-ம் தேதியும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →