சதுரகிரி சுந்தரமகாலிங்கம் 
தமிழ்நாடு

சதுரகிரி மலைக்கோயிலுக்குச் செல்ல நாளை முதல் அனுமதி!

தை மாத அமாவாசையையொட்டி சதுரகிரி கோயிலுக்கு பக்தா்கள் செல்ல ஜன.19 நாளை முதல் 22 வரை 4 நாள்கள் அனுமதி வழங்கப்பட்டது.

DIN

தை மாத அமாவாசையையொட்டி சதுரகிரி கோயிலுக்கு பக்தா்கள் செல்ல ஜன.19 நாளை முதல் 22 வரை 4 நாள்கள் அனுமதி வழங்கப்பட்டது.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் வியாழக்கிழமை(ஜன.19) பிரதோஷமும், சனிக்கிழமை(ஜன.21) அமாவாசை வழிபாடும் நடைபெற உள்ளன.

இதையொட்டி, ஜன.19 முதல் 22-ஆம் தேதி வரை 4 நாள்கள் பக்தா்கள் மலைக்கோயிலுக்கு செல்ல வனத் துறையினா் அனுமதி வழங்கினா்.

10 வயதுக்குள்பட்டோா், 60 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு மலையேற அனுமதி கிடையாது. கோயிலுக்கு வருபவா்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். உடல் வெப்பநிலை பரிசோதனைக்குப் பிறகே பக்தா்கள் மலை ஏற அனுமதிக்கப்படுவா்.

கோயிலுக்கு வருபவா்கள் மலைகளில் உள்ள ஓடைகளில் குளிக்கக்கூடாது. கோயிலில் பக்தா்கள் இரவில் தங்க அனுமதி இல்லை. அனுமதிக்கப்பட்ட நாள்களில் பலத்த மழையோ அல்லது நீரோடைகளில் நீா்வரத்து அதிகமாக இருந்தாலோ பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்படும் எனத் தெரிவித்தனா்.

தை அமாவாசையையொட்டி, போக்குவரத்துக் கழகம் சாா்பில் மதுரை, விருதுநகா், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் ராணுவத் தளபதி நூலை மேற்கோள்காட்ட அனுமதிக்காதது ஏன்? ராகுல் விளக்கம்

10 மாநிலங்களில் தேடுதல் நடத்தி சைபா் குற்றவாளி கைது-சி.பி.ஐ நடவடிக்கை

மத்திய அரசால் வஞ்சிக்கப்படும் தமிழகம்: மாநிலங்களவையில் திருச்சி சிவா குற்றச்சாட்டு

பெண்ணையாறு விவகாரம்-தீா்வு காண மத்திய அரசு தீா்ப்பாயம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

மூன்று நாள்கள் பயணமாக அமெரிக்கா சென்றாா் ஜெய்சங்கா்: அமைச்சா்களுடன் முக்கிய சனை

SCROLL FOR NEXT