தமிழ்நாடு

மாநில மொழிகளில் தீர்ப்பு: முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு

உச்சநீதிமன்ற தீர்ப்புகள், மாநில மொழிகளில் மொழி பெயர்க்கப்படும் என்ற அறிவிப்புக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். 

DIN

உச்சநீதிமன்ற தீர்ப்புகள், மாநில மொழிகளில் மொழி பெயர்க்கப்படும் என்ற அறிவிப்புக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டும் என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ள கருத்தை முழுமனதுடன் வரவேற்கிறேன்.

இதனோடு, உயர்நீதிமன்றங்களில் மாநில அலுவல் மொழிகளை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்ற நமது நீண்டநாள் கோரிக்கையையும் நிறைவேற்றுவது நீதியை நாட்டின் சாமானிய மக்களுக்கு அருகில் கொண்டு வரும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

மகாராஷ்டிரம்-கோவா வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், உச்சநீதிமன்றத் தீா்ப்புகள் பிராந்திய மொழிகளில் மொழிபெயா்க்கப்பட வேண்டுமெனத் தெரிவித்தாா்.

ஏற்கெனவே உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூடின் கருத்துக்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில் தற்போது முதல்வர் ஸ்டாலினும் அக்கருத்தை வரவேற்றுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2-வது டெஸ்ட்: மாட் ஹென்றி 5 விக்கெட்டுகள்; 125 ரன்களுக்கு ஜிம்பாப்வே ஆட்டமிழப்பு!

பூவிழி பார்வை... ஜனனி!

சிறுமி வன்கொடுமை வழக்கு: ஆசாராம் பாபு இடைக்கால ஜாமீன் மீண்டும் நீட்டிப்பு!

ராகுல் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை - தேர்தல் ஆணையம்

மியான்மர் அதிபர் காலமானார்!

SCROLL FOR NEXT