அதிமுக மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனையில் ஈடுபட்டார்.
சென்னை எழும்பூரில் தனியார் விடுதியில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூடத்தில், 87 மாவட்ட செயலாளர்கள், 114 தலைமை நிர்வாகிகள், 28 அமைப்புச் செயலாளர்கள் ஆலோசனையில் பங்கேற்றனர்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் உள்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் இணைந்து கையெழுத்திட்டால்தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும் எனக் குறிப்பிட்டார்.