சிதம்பரத்தில் மகா சண்டியாகம்
சிதம்பரம் ஸ்ரீ பாலா குரு சேவா மண்டலி சார்பில் மகா சண்டியாகம் சிதம்பரம் நடராஜ நகர் வித்யா பால பீடத்தில் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.
சிதம்பரம் ஸ்ரீ பாலா குரு சேவா மண்டலி சார்பில் உலக நன்மை கருதி ஸ்ரீ பாலா மகா திரிபுரசுந்தரிக்கு நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு மங்கல தசமி மகா சண்டியாகம் சிதம்பரம் நடராஜ நகர் வித்யா பால பீடத்தில் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.
டி.செல்வரத்தின தீட்சிதர் தலைமையிலான ஆச்சாரியார்கள் மகா சண்டியாகத்தை சிறப்பாக நடத்தினர்.
இதையும் படிக்க: தங்கம் விலை குறைவு: எவ்வளவு தெரியுமா?
திரளான பக்தர்கள் இந்த சண்டியாகத்தில் பங்கேற்று சங்கல்பம் செய்து தரிசித்தனர்.