தமிழ்நாடு

அரசுப் பணிகளில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை: அரசாணை வெளியீடு!

தமிழ்நாடு அரசுப் பணிகளில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமைக்கான சான்றிதழ் வழங்குவது தொடர்பான அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு  வெளியிட்டுள்ளது. 

DIN

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணிகளில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமைக்கான சான்றிதழ் வழங்குவது தொடர்பான அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு  வெளியிட்டுள்ளது. 

கரோனா தொற்றுக்கு பெற்றோர் இரண்டு பேரையும் இழந்தவர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசுப் பணியிடங்களில் முன்னுரிமை வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசாணையாக தமிழ்நாடு அரசு  வெளியிட்டுள்ளது. 

அரசாணையில், அரசுப் பணிகளில் முதல் தலைமுறை பட்டதாரிகள், கரோனா தொற்றுக்கு பெற்றோர் இருவரையும் இழந்து தேர்ச்சி பெற்றவர்கள்,  தமிழ்நாடு அரசுப் பள்ளியில் தமிழ் மொழியில் பயின்றவர்களுக்கு முன்னுரிமை மற்றும் முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் வழங்குவதற்கான விளக்கமான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யூரியா உரத்தை அதிகம் பயன்படுத்த வேண்டாம்: விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

தூத்துக்குடியில் பணம் கேட்டு மிரட்டியவா் கைது

தென்காசியில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தோ்வு

அடைக்கலாபுரம் அதிசய ஆரோக்கிய அன்னை ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

தயிா் சந்தை கடைகள் ஒதுக்கீடு பிரச்னைக்கு தீா்வு கோரி மனு

SCROLL FOR NEXT