முகப்பு
தமிழ்நாடு

கோவையில் புறா பந்தயம்... ஆர்வமுடன் புறாக்களை பறக்கவிட்ட இளைஞர்கள்.!

கோவை புலியகுளம் பெரியார் நகர் பகுதியில் நடைபெற்ற புறா பந்தயத்தில் இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு புறாக்களை பறக்கவிட்டனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:15 PM
பகிர்:



கோவை புலியகுளம் பெரியார் நகர் பகுதியில் நடைபெற்ற புறா பந்தயத்தில் இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு புறாக்களை பறக்கவிட்டனர்.

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று புறா பந்தயம் நடைபெற்றது. இதில் புலியகுலம் பகுதியில் கோயமுத்தூர் புலியகுளம் பி.ஜி.என்., பிரண்ட்ஸ் இன் சார்பில் 18 ஆவது ஆண்டாக ஞாயிற்றுக்கிழமை காலை ஒரு நாள் சாதா புறா பந்தயம் தொடங்கியது. 

பந்தயத்தில் கலந்து கொண்ட புறாக்களுக்கு அடையாளமாக சீல் வைக்கப்பட்டது. இதில் 19 கூண்டுகளைச் சேர்ந்தவர்கள் 19 புறாக்களை பறக்கவிட்டனர்.

பறக்க விட்ட புறாக்கள் மாலை 6 மணியிலிருந்து 8 மணிக்குள் அவரவர் கூண்டுகளில் அமர வேண்டும். இப்படி அமருவதின் அடிப்படையில் புறாக்களுக்கு முதல், இரண்டு மூன்று என பரிசுகள் வழங்கப்படும்.

முழு கட்டுரையைப் படிக்க →