கிருஷ்ணகிரி அணை, பாரூர் ஏரியிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
கிருஷ்ணகிரி அணை, பாரூர் ஏரியிலிருந்து முதல் போக பாசனத்திற்கு தண்ணீரை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கே.எம் சரயு திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணை, பாரூர் ஏரியிலிருந்து முதல் போக பாசனத்திற்கு தண்ணீரை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கே.எம் சரயு திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
கிருஷ்ணகிரி அணையில் இருந்து திறக்கப்பட்ட பாசன நீர் மூலம் பெரிய முத்தூர், தளியள்ளி , மாரி செட்டிய அள்ளி, திம்மாபுரம், குண்டல பட்டி, பையூர் பதினாறு ஊராட்சிகளை சேர்ந்த 9012 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் பயன்பெறும்.
இதையும் படிக்க | சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சொகுசு காரின் டயர்களை கழட்டிச் சென்ற மர்ம நபர்கள்: சீர்காழியில் பரபரப்பு!
Advertisement
Advertisement
பாரூர் ஏரியிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மூலம் பாரூர், கோட்டப்பட்டி, அரசம்பட்டி உள்ளிட்ட 7 ஊராட்சிகளை சேர்ந்த பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் பயன்பெறும்.
இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினர் அ. செல்லகுமார், பர்கூர் சட்டப்பேரவை உறுப்பினர் தே. மதியழகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.