முகப்பு
தமிழ்நாடு

கிருஷ்ணகிரி அணை, பாரூர் ஏரியிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

கிருஷ்ணகிரி அணை, பாரூர் ஏரியிலிருந்து முதல் போக பாசனத்திற்கு தண்ணீரை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கே.எம் சரயு திங்கள்கிழமை திறந்து வைத்தார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:16 PM
பகிர்:


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணை, பாரூர் ஏரியிலிருந்து முதல் போக பாசனத்திற்கு தண்ணீரை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கே.எம் சரயு திங்கள்கிழமை திறந்து வைத்தார்.

கிருஷ்ணகிரி அணையில் இருந்து திறக்கப்பட்ட பாசன நீர் மூலம் பெரிய முத்தூர்,  தளியள்ளி , மாரி செட்டிய அள்ளி,  திம்மாபுரம்,  குண்டல பட்டி, பையூர் பதினாறு ஊராட்சிகளை சேர்ந்த 9012 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் பயன்பெறும்.

பாரூர் ஏரியிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மூலம் பாரூர்,  கோட்டப்பட்டி, அரசம்பட்டி உள்ளிட்ட 7 ஊராட்சிகளை சேர்ந்த பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் பயன்பெறும்.

இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினர் அ. செல்லகுமார், பர்கூர் சட்டப்பேரவை உறுப்பினர் தே. மதியழகன் ஆகியோர் கலந்துகொண்டனர். 
 

முழு கட்டுரையைப் படிக்க →