அதிமுகவின் பொன்விழா எழுச்சி மாநாடு: ஏழு குழுக்கள் அமைப்பு
மதுரையில் நடைபெறவுள்ள அதிமுக மாநாட்டிற்கான பணிகளை மேற்கொள்ள ஏழு குழுக்களை நியமித்து அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.
மதுரையில் நடைபெறவுள்ள அதிமுக மாநாட்டிற்கான பணிகளை மேற்கொள்ள ஏழு குழுக்களை நியமித்து அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.
மதுரையில் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி அதிமுகவின் 'வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு' நடைபெற உள்ளது.
அதிமுக மாநாட்டுக்கான இலச்சினையை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலத்தில் புதன்கிழமை நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டார்.
இதையும் படிக்க | பொது சிவில் சட்டத்திற்கு அதிமுக எதிர்ப்பு!
இதையடுத்து மாநாட்டிற்கான பணிகளை மேற்கொள்ள முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் அடங்கிய ஏழு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழு, மாநாட்டு விழா மலர் குழு, பந்தல் குழு, விளம்பரம் செய்தித்தொடர்பு மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக் குழு, உணவுக் குழு, மாநாட்டு தீர்மானக் குழு, மாநாட்டு வரவேற்புக் குழு அமைக்கப்பட்டுள்ளன.
இந்த குழுக்கள் உடனடியாக தங்கள் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.