விவசாயிகளை விற்பனையாளர்களாக உயர்த்த வேண்டும்! மு.க. ஸ்டாலின்!
வேளாண்மைத் துறை அரசின் முதன்மைத் துறையாக உள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடுவிவசாயிகளை விற்பனையாளர்களாக உயர்த்த வேண்டும்! மு.க. ஸ்டாலின்!
வேளாண்மைத் துறை அரசின் முதன்மைத் துறையாக உள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வேளாண்மைத் துறை அரசின் முதன்மைத் துறையாக உள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நந்தம்பாக்கத்தில் வேளாண்மைத் துறை சார்பில் மேலாண்மை வணிக திருவிழாவை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடக்கி வைத்தார். இதில், அதிக உற்பத்தி அளித்த விவசாயிகளுக்கு, ஏற்றுமதி செய்த விவசாயிகளுக்கு விருது வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின்,
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மண்ணும் செழித்துள்ளது மக்களும் செழித்துள்ளனர். திமுக ஆட்சியில் வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
ரூ. 61 கோடி மதிப்பில் குறுவை சாகுபடி திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. வேளாண்மைத் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
உழவர்களை உற்பத்தியாளர்களாக மட்டுமின்றி விற்பனையாளர்களாகவும் மாற்றா வேண்டும். வேளாண்மையில் நவீன தொழில் நுட்பம் அறிமுகப்படுத்த வேண்டும்.
காவிரி டெல்டாவின் வளர்ச்சிப் பகுதிகளை அக்கறையுடன் கவனித்ததால் வேளாண் புரட்சி ஏற்பட்டுள்ளது. விவசாயிகளை துன்புறுத்தும் வகையில் 3 சட்டங்களை இயற்றியது மத்திய அரசு எனக் குறிப்பிட்டார்.