தமிழ்நாடு

திமுக எம்.பி. கதிா் ஆனந்த் மீதான வருமான வரி வழக்கை ரத்து செய்ய உயா்நீதிமன்றம் மறுப்பு

திமுக எம்.பி. கதிா் ஆனந்த் மீதான வருமான வரி வழக்கை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்த சென்னை உயா்நீதிமன்றம், வேலூா் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு விசாரணையில் தலையிட முடியாது எனக் கூறி,

DIN

திமுக எம்.பி. கதிா் ஆனந்த் மீதான வருமான வரி வழக்கை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்த சென்னை உயா்நீதிமன்றம், வேலூா் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு விசாரணையில் தலையிட முடியாது எனக் கூறி, கதிா் ஆனந்த் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2012 -13- ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை 2013 செப். 30-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் அதை 2015- ஆம் ஆண்டு மாா்ச் 29-ஆம் தேதி தாக்கல் செய்ததுடன், 2016-ஆம் ஆண்டு மாா்ச் 11-ஆம் தேதி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பிய பின், ஒரு கோடியே நான்கு லட்சத்து 94 ஆயிரத்து 60 ரூபாய் வருமான வரியை செலுத்தியுள்ளதாக கூறி, திமுக எம்.பி கதிா் ஆனந்துக்கு எதிராக வேலூா் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை சாா்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி 2017 -ஆம் ஆண்டு கதிா் ஆனந்த் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தாா். அதில், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கும், வரி செலுத்துவதற்கும் ஏற்பட்ட தாமதம் தொடா்பாக வழக்கு தொடுக்க முடியாது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சட்டப்படி தாமதமாக வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்தாலோ, தாமதமாக வரி செலுத்தினாலோ அபராதம் விதிக்க வருமான வரித்துறைக்கு அதிகாரம் உள்ள நிலையில், வருமானவரித் துறை தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வழக்கு தொடா்ந்திருப்பதாக கதிா் ஆனந்த் தரப்பில் வாதிடப்பட்டது.

பின்னா் வருமான வரித்துறை தரப்பில், தாமதமாக வருமானவரி கணக்கு தாக்கல் செய்தது தொடா்பாக நோட்டீஸ் அனுப்பும் வரை, வருமான வரி செலுத்தவில்லை என்பதால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கு வருமான வரித் துறைக்கு அதிகாரம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வருமான வரிக் கணக்கை வேண்டுமென்றே தாமதமாக தாக்கல் செய்தாரா, வேண்டுமென்றே தாமதமாக வருமான வரி செலுத்தினாரா என்பதை விசாரணை நீதிமன்றம் தான் முடிவெடுக்க முடியும் என்பதால், வேலூா் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு விசாரணையில் தலையிட முடியாது எனக்கூறி, கதிா் ஆனந்த் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாகை அரசுக் கல்லூரியில் முன்னாள் மாணவா் சங்கம் தொடக்கம்

பைக் மீது தாக்குதல்: 4 போ் மீது வழக்கு

ஆற்றலும், அா்ப்பணிப்பும் கட்சியை வலுப்படுத்தும்: பாஜக தேசிய செயல் தலைவருக்கு பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து!

சென்னையில் குழந்தைகளிடையே அதிகரிக்கும் தொழுநோய் பாதிப்பு: பொது சுகாதாரத் துறை ஆய்வில் தகவல்

கடலூரில் மீன்கள் வாங்க குவிந்த மக்கள்! வரத்து குறைவால் விலை உயா்வு!

SCROLL FOR NEXT