தமிழ்நாடு

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

DIN

அத்தியாவசிய பொருள்கள் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு அவர் எழுதிய கடிதத்தில்..

உணவுப் பொருள் பணவீக்கத்தில் காணப்படும் கவலைக்குரிய நிலை குறித்து மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டுவர விழைகிறேன்.

உணவுப் பொருள்களின் விலை உயர்வால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உதவ வேண்டும்.

மத்திய அரசின் கையிருப்பில் உள்ள உணவுப் பொருள்களை விடுவிப்பது விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த உதவும்.

அரிசி, கோதுமை, துவரம்பருப்பு, தக்காளி உள்ளிட்டவற்றின் விலை உயர்வால் ஏழை, நடுத்தர குடும்பத்தினர் கடும் பாதிக்குள்ளாகியுள்ளனர்.

மாதம் ஒன்றுக்கு தலா 10,000 டன் கோதுமை, துவரம் பருப்பு ஒதுக்க வேண்டும் என்று அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

SCROLL FOR NEXT