மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நாளை நடை திறப்பு!
ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை மாலை 5 மணியளவில் திறக்கப்படுகிறது.
தமிழ்நாடுமாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நாளை நடை திறப்பு!
ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை மாலை 5 மணியளவில் திறக்கப்படுகிறது.
ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை மாலை 5 மணியளவில் திறக்கப்படுகிறது.
கேரளத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல, மகரவிளக்கு பூஜை தவிர தமிழ் மாதப் பிறப்பையொட்டி முதல் 5 நாள்கள் நடை திறக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில், ஆடி மாத பூஜைக்காக ஜூலை 16(ஞாயிற்றுக்கிழமை) மாலை நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்துவைத்து குத்துவிளக்கு ஏற்றி தீபாராதனை நடத்துகிறார்.
பின்னர், ஜூலை 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை 5 நாள்கள் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். வழக்கான பூஜைகளுடன், நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், களசாபிஷேகம், சகஸ்ர கலசாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை ஆகியவை நடைபெறும்.
ஜூன் 21-ம் தேதி இரவு 10 மணியளவில் கோயிலின் நடை அடைக்கப்படும். வழக்கமாக ஆன்லைன் முன்பதிவு மூலம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.