அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த இரண்டு நாள்களாக பகல் நேரத்தில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், மாலை நேரத்தில் வானம் சற்று மேக மூட்டத்துடனும், ஒரு சில இடங்களில் சிறு தூரலும் விழுந்து வருகிறது.
இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில், நீலகிரி, கோவை, ஈரோடு, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, ராமநாதபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலைய ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.