சுந்தரனார் பல்கலையில் 1053 பேருக்கு பட்டம் வழங்கினார் ஆளுநர்!
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு 1053 மாணவ, மாணவிகளுக்கு நேரடியாக பட்டங்களை வழங்கினார்.
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக 29ஆவது பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு 1053 மாணவ, மாணவிகளுக்கு நேரடியாக பட்டங்களை வழங்கினார்.
மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக 29ஆவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.
இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு 1053 மாணவ, மாணவிகளுக்கு நேரடியாக பட்டங்களை வழங்கினார். இதில் 948 பேர் முனைவர் பட்டமும், 105 பேர் தங்கப் பதக்கங்களும் பெற்றனர்.