அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து ராணிப்பேட்டையில்  நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அதிமுகவினர். 
தமிழ்நாடு

விலைவாசி உயர்வு: ராணிப்பேட்டையில் அதிமுக ஆர்ப்பாட்டம்!

ராணிப்பேட்டையில் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றத்தை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

DIN

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றத்தை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

தமிழ்நாட்டில் அத்தியவாசிய பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து அதிமுக சார்பில் வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 

அதன்படி, தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. 

ராணிப்பேட்டையில் தக்காளி உள்பட காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து மாவட்ட அதிமுக சார்பில் முத்துக்கடை காந்தி சிலை அருகே வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. 

ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணை கொறடாவுமான சு.ரவி எம்எல்ஏ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அதிமுகவினர் காய்கறிகளை மாலைகளாக  அணிந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிபிஎல்: முதல் அரைசதத்தை பதிவுசெய்த பாபர் அசாம்!

உக்ரைன் மீது ரஷியா ஏவுகணைத் தாக்குதல்! 8 பேர் பலி!

ஒரே போட்டியில் இரண்டு சாதனைகள் படைத்த ஹார்திக் பாண்டியா!

கோவையில் போட்டியா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

விவசாயிகள், ஏழைகளின் நலன்கள் மீதான தாக்குதல்: விபி ஜி ராம் ஜி குறித்து சோனியா காந்தி

SCROLL FOR NEXT