தமிழ்நாடு

தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

DIN


சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் திங்கள்கிழமை(ஜூலை 24) முதல் 7 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வால்பாறை வட்டாரத்தில் தினமும் சாரல் மழை பெய்து வந்தது. இந்தநிலையில் கடந்த 20 நாட்களாக அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. கடந்த சனிக்கிழமை காலை தொடங்கிய மழை தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை இரவு வரை நீடித்தது.

தொடா் மழையால் வால்பாறை பகுதியில் கடும் குளிா் நிலவுகிறது. 

உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக பலத்த காற்றுடன் தொடா் சாரல் மழையும், அவ்வப்போது கனமழையும் பெய்து வருகிறது. 

இந்த நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் திங்கள்கிழமை(ஜூலை 24) முதல் 7 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இன்று திங்கள்கிழமை ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஷம் குடித்த விவசாயி உயிரிழப்பு

தொழிலாளி வீட்டில் 15 பவுன் நகைகள் திருட்டு

கூழாங்கற்கள் கடத்திய டிப்பா் லாரி பறிமுதல்

ஆனைமடுவு அணை பகுதியில் கொட்டித் தீா்த்த மழை விவசாயிகள் மகிழ்ச்சி

கல்வடங்கம் அங்காளம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT