முகப்பு
தமிழ்நாடு

ஐடிபிஓ அரங்கம் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

தில்லியில் இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பு(ஐடிபிஓ)வளாக திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:43 AM
பகிர்:

தில்லியில் இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பு(ஐடிபிஓ)வளாக திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். 

ஜி-20 தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாட்டை வருகிற செப்டம்பர் மாதம் இந்தியா நடத்துகிறது. அதையொட்டி நாடு முழுவதும் 200 இடங்களில் பல்வேறு தலைப்புகளில் ஜி-20 தொடர்பான கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் தில்லியில் ஜி-20 மாநாட்டுக்காக மறுவடிமைக்கப்பட்ட இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பு அரங்கைத் திறந்துவைத்து நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளார். இதற்கான சிறப்புப் பூஜையிலும் மோடி கலந்துகொண்டார். 

இந்நிகழ்ச்சியில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சிதாராமன், அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →