தமிழக அரசு 
தமிழ்நாடு

தமிழகத்தில் வரும் ஞாயிறு ரேஷன் கடைகள் செயல்படும்!

தமிழகத்தில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும் என்று உணவுப் பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது.

DIN

தமிழகத்தில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும் என்று உணவுப் பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஜூன் 24 அன்று தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைத்தார்.

முதல் கட்டமாக இந்த முகாமானது வருகின்ற ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை 20,765 நியாய விலைக் கடைகளில் நடைபெறுகின்றன.

இந்நிலையில், மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் பணிக்காக வருகின்ற ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 30) அனைத்து நியாய விலைக் கடைகளும் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், பணிநாளுக்கு ஈடாக ஆகஸ்ட் 26-ஆம் தேதி விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வசீகரத்தின் உறைவிடம்... ஜொனிதா காந்தி!

சுவர் இருப்பின் சித்திரம்... நிகிதா ஷர்மா!

காஷ்மீரில் சண்டை எப்போது முடிவுக்கு வரும்? ஃபரூக் அப்துல்லா பதில்!

ஊட்டல் தேவஸ்தானத்தில் ஆடிப்பெருக்கு விழா

நோட்டுப் புத்தகம், எழுது பொருள்கள் அளிப்பு

SCROLL FOR NEXT