தமிழ்நாடு

உதகைக்கு  வாகனங்கள் செல்வதில் கட்டுப்பாடு தளர்வு

DIN

உதகைக்கு  வாகனங்கள் செல்வதில் இருந்த கட்டுப்பாட்டிற்கு இன்றுமுதல்(ஜூந்1) தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

கோடை விழா முடிந்ததால் உதகைக்கு மேட்டுப்பாளையம், கோத்தகிரி உள்ளிட்ட 2 வழித்தடங்களில் வாகனங்களை இயக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கம் போல் 2 வழித்தடங்களில் வாகனங்களை இயக்கலாம் என மாவட்ட எஸ்.பி. அறிவிப்பு விடுத்துள்ளார். மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியாகவும், மறுவழித்தடத்தில் கோத்தகிரி வழியாகவும் செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதகையில் கோடை சீசனை கழிக்க வரும் சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக மேட்டுப்பாளையம் - குன்னூா் சாலை ஏப்ரல் 26 ஆம் தேதி ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டது.

இந்நிலையில், கோடை சீசன் நிறைவடைந்துள்ளதால் ஜூன் 1 ஆம் தேதி முதல் வழக்கம்போல் மேட்டுப்பாளையம் - குன்னூா் சாலையில் இருவழித் தடங்களிலும் வாகனங்களை இயக்கிக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பதிவேடு முறைகேடு மூலம் பணம் மோசடி: கூட்டுறவுத் துறை அலுவலருக்கு முன்பிணை

ராஜீவ் காந்தி நினைவு தினம்

கொடைக்கானல் கோடை விழாவில் பரத நாட்டிய நிகழ்ச்சி

பாரத் பைபா் சேவையை சிறப்பாக வழங்கியவா்களுக்கு விருது

பழனி ஆரம்ப சுகாதார மையத்துக்குள் புகுந்த மழை நீரால் நோயாளிகள் அவதி

SCROLL FOR NEXT