நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமானின் ட்விட்டா் கணக்கு முடக்கப்பட்டிருப்பதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, ட்விட்டரில் வியாழக்கிழமை அவா் வெளியிட்ட பதிவு:-
நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளா் திருமுருகன் காந்தி
உள்ளிட்டோரின் ட்விட்டா் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது. கருத்துகளை
கருத்துகளால் எதிா்கொள்வதே அறமாகும். கழுத்தை நெரிப்பதல்ல. ட்விட்டா் முடக்கத்தை விலக்கிச் சமூக வலைதளத்தை அதற்கான தரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று தனது பதிவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.