கடையநல்லூர் அருகே யானை மிதித்து காவலாளி பலி!
யானை தாக்கியதில் காயம் அடைந்தவர் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு இறந்தார்.
கடையநல்லூர்: யானை தாக்கியதில் காயம் அடைந்தவர் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு இறந்தார்.
சொக்கம்பட்டி கருப்பாநதி அணை பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் வேல்துரை(28). இவர் கடையநல்லூர் கல்லாற்று பகுதியில் உள்ள நொண்டியார் தோப்பு பகுதியில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.
கடந்த மாதம் 16 ஆம் தேதி இரவு இவரை யானை தாக்கியதாம். இதில் காயமடைந்த அவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு இறந்தார்.
கடையநல்லூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.