முகப்பு
தமிழ்நாடு

ஆரணி அருகே கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

ஆரணியை அடுத்த சேவூர் ஆதிபகவன் ஜெயின் கோயிலில் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை மர்ம நபர்கள்  திருடிச் சென்றனர்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:00 PM
பகிர்:

ஆரணியை அடுத்த சேவூர் ஆதிபகவன் ஜெயின் கோயிலில் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை மர்ம நபர்கள்  திருடிச் சென்றனர்.

மேலும், அம்மன் சுவாமி சிலைகளில் இருந்த தாலி பொட்டுகளும் திருடப்பட்டுள்ளது. உண்டியலில் இருந்த சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் தாலி பொட்டுகளை மர்ப நபர்கள்  திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சம்பவம் குறித்து ஆரணி கிராமிய காவல் நிலைய காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.