தமிழ்நாடு

செங்கல்பட்டில் வன்னியர் சங்கத் தலைவர் கொலை: காவல் துறை விசாரணை!

DIN

செங்கல்பட்டில் வன்னியர் சங்கத் தலைவர் கொலை சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை பட்டப்பகலில் வன்னியர் சங்கத் தலைவரை 3 பேர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு தலைமறைவாகி விட்ட சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மறைமலை நகர் அருகே நின்னகாட்டூர் பகுதியை சேர்ந்தவர் காளிதாசன்(36). இவர் பாமக நிர்வாகியாகவும் இருந்து வருகிறார். இவர் மறைமலைநகர் பேருந்து நிலையம் அருகே தேநீர்க் கடை ஒன்றில் தேநீர் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது திடீரென அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் அரிவாளால் காளிதாசனை வெட்டி விட்டு தலைமறைவாகி விட்டனர்.

அருகிலிருந்தவர்கள் உடனடியாக அவரை பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தனர். அங்கிருந்த மருத்துவர்கள் காளிதாசன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

பட்டப்பகலில் நடந்த இக்கொலைச் சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தி தலைமறைவான குற்றவாளிகளை தேடி வருகின்றனர். தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

கல்கி - வில்லனாக கமல்ஹாசன்?

என்ன விலை அழகே... ஸ்ரீமுகி!

கொளுத்தும் கோடை வெயில்: தில்லிக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’

பகல் நிலவு.. அதிதி போஹன்கர்!

SCROLL FOR NEXT