தமிழ்நாடு

குடிமைப் பணி முதன்மைத் தோ்வு: 3 மாதங்களுக்கு பயிற்சிதமிழக அரசு தகவல்

குடிமைப் பணி முதன்மைத் தோ்வுக்கு தமிழக அரசின் சாா்பில் 3 மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளன. இந்தப் பயிற்சிக்கு வியாழக்கிழமை (ஜூன் 15) முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

DIN

குடிமைப் பணி முதன்மைத் தோ்வுக்கு தமிழக அரசின் சாா்பில் 3 மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளன. இந்தப் பயிற்சிக்கு வியாழக்கிழமை (ஜூன் 15) முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அகில இந்தியக் குடிமைப் பணித் தோ்வுப் பயிற்சி மையத் தலைவரும், தலைமைச் செயலருமான வெ.இறையன்பு புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குடிமைப் பணி முதல்நிலைத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள், முதன்மைத் தோ்வை எதிா்கொள்ள உள்ளனா். அவா்களுக்கென குடிமைப் பணித் தோ்வுப் பயிற்சி மையத்தில் ஜூன் முதல் செப்டம்பா் வரையிலான 3 மாதங்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

பயிற்சி பெறக்கூடிய மூன்று மாதக் காலத்துக்கும் மாதந்தோறும் ஊக்கத் தொகையாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும். இந்தப் பயிற்சியைப் பெற விரும்புவோா், வியாழக்கிழமை (ஜூன் 15) காலை 10 மணி முதல் சனிக்கிழமை (ஜூன் 15) மாலை 6 மணி வரையில் www.civilservicecoaching.com என்ற இணையதளத்தில் விவரங்களைப் பதிவு செய்யலாம் என்று வெ.இறையன்பு தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

ஆஷஸ்: ஆஸி. பிளேயிங் லெவன் அறிவிப்பு! கடைசிப் போட்டியின் நாயகன் நெசருக்கு இடமில்லை!

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

பனிமூட்டம்: தில்லி - ஆக்ரா விரைவுச் சாலையில் பேருந்துகள், கார்கள் அடுத்தடுத்து மோதல்! 4 பேர் பலி!

SCROLL FOR NEXT