முகப்பு
தமிழ்நாடு

குஷ்பு குறித்து அவதூறாகப் பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது

குஷ்பு குறித்து அவதூறாகப் பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.  

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:09 PM
பகிர்:


சென்னை: குஷ்பு குறித்து அவதூறாகப் பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.  
 
நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குறித்து குஷ்பு குறித்து அவதூறாகப் பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தும் என குஷ்பு தெரிவித்திருந்திருந்தார். 

இந்த நிலையில், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்து திமுக தலைமைக் கழகம் அறிவித்தது. 

இதனைத் தொடர்ந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை தற்போது கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.