சங்கர் ஜிவால் (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

40 கி.மீ. வேகத்திற்கு மேல் வாகனங்களை ஓட்டினால் அபராதம்: சங்கர் ஜிவால்

சென்னையில் 40 கி.மீ. வேகத்திற்கு மேல் வாகனங்களை ஓட்டினால் அபராதம் விரைவில் விதிக்கப்படும் என்று காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

DIN

சென்னையில் 40 கி.மீ. வேகத்திற்கு மேல் வாகனங்களை ஓட்டினால் அபராதம் விரைவில் விதிக்கப்படும் என்று காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் தொடர்பாக கூகுல் மேப்பில் டிராபிக் அலர்ட் வசதியை தொடக்கிவைத்தார். அப்போது பேசியதாவது: 

விபத்துக்களை தடுக்க மணிக்கு 40 கி.மீ. வேகம் என்ற கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளது. வேகமாக செல்லும் வாகனங்களைக் கண்டறிய 20 இடங்களில் கண்காணிப்பு கருவி பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில்  காலை 7 மணி முதல் இரவு 10 மணி அளவில் வரை 

1) ஆட்டோ 25 கி.மீ., வேகம்

2) கனரக வாகனங்கள் 35 கி.மீ., வேகம்

3) கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் 40  கி.மீ., வேகம்

இரவு நேரங்களில் 10 மணி முதல் காலை 7 மணி வரை 

1) ஆட்டோ 35  கி.மீ., வேகம்

2) கனரக வாகனங்கள் 40  கி.மீ., வேகம்

3) கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் 50  கி.மீ., வேகம்

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 12 விடியோக்களை உருவாக்கி உள்ளோம். போக்குவரத்து காவர்களின் பணிச்சுமையை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று  சங்கர் ஜிவால் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

SCROLL FOR NEXT