சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடி குண்டு மிரட்டல்!
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு விடுக்கப்பட்ட வெடி குண்டு மிரட்டல் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு விடுக்கப்பட்ட வெடி குண்டு மிரட்டல் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு இருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த அழைப்பால் பரபரப்பு நிலவியது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு ஒரு நாளைக்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வந்து செல்கின்றனர். இந்நிலையில் காவல் கட்டுப்பாடு அறைக்கு வந்த அழைப்பில் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாகவும், விரைவில் வெடிக்கவிருப்பதாகவும் ஒரு நபர் கூறியுள்ளார்.
Advertisement
Advertisement
இதனையடுத்து சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், ரயில்வே காவல் துறையினர், வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் மோப்ப நாய் கொண்டும், அரசு இருப்புபாதை காவல் துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் முழுவதும் சோதனை மேற்கொள்ளும் பணி நடைபெற்றது. ரயில்வே பயணிகளின் பைகளில் சோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில், முதற்கட்ட விசாரணையில் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த அழைப்பை விசாரணை செய்த காவல் துறையினர் வியசார்பாடியை சேர்ந்த மனநலம் குன்றிய நபர் மணிகண்டன் (21) என்பது தெரியவந்தது.
இவர் ஏற்கனவே சென்ட்ரல் ரயில் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.