செந்தில் பாலாஜி(கோப்புப்படம்) 
தமிழ்நாடு

அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதற்கு எதிராக அதிமுக வழக்கு!

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு தொடர்ந்துள்ளது.

DIN

சென்னை: செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு தொடர்ந்துள்ளது.

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

இதனால், நிர்வாக காரணத்திற்காக செந்தில் பாலாஜியின் துறைகள் மட்டும் பிற அமைச்சர்களுக்கு மாற்றப்பட்டு துறையில்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுகவின் முன்னாள் எம்.பி.ஜெயவர்த்தன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

முன்னதாக, தமிழகம் முழுவதும் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கக் கோரி நேற்று அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT