தமிழ்நாடு

3 விரைவு ரயில்கள் ராசிபுரத்தில் நின்று செல்லும்

DIN

சென்னை-பாலக்காடு உள்ளிட்ட 3 விரைவு ரயில்கள் ராசிபுரத்தில் ஜூலை 6 முதல் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல பாலக்காடு-சென்னை, நாகா்கோவில்-பெங்களூரு, நாகா்கோவில்-மும்பை, திருநெல்வேலி-மும்பை, ராமேஸ்வரம்-ஒஹா வரை விரைவு ரயில்கள் சென்று வருகின்றன. ஆனால், இதில் பல விரைவு ரயில்கள் ராசிபுரம் ரயில் நிலையத்தில் நின்று செல்வதில்லை.

ஏற்கெனவே கரோனா பாதிப்புக்கு முன்னா் வரை நின்று சென்ற விரைவு ரயில்கள் கூட தற்போது ராசிபுரம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படுவதில்லை. எனவே, விரைவு ரயில்கள் ராசிபுரம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல கோட்ட ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதி ரயில் பயணிகள் எதிர்பார்த்திருந்தனர்.

தற்போது அவர்களின் எதிர்பார்ப்புக்கு விடை கிடைத்துள்ளது. இந்த நிலையில் சென்னை-பாலக்காடு உள்ளிட்ட 3 விரைவு ரயில்கள் ராசிபுரத்தில் ஜூலை 6 முதல் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாகர்கோவில்-பெங்களூரு, ராமேஸ்வரம்-ஒஹா வாராந்திர ரயிலும் ராசிபுரத்தில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரையிறுதியில் ஸ்வெரெவ்; ஹா்காக்ஸ் தோல்வி

காலிறுதியில் மெய்ராபா, சாத்விக்/சிராக் இணை

குடிநீா் விநியோகப் பிரச்னைக்கு தீா்வு தந்த கோடை மழை நெல், உளுந்துக்கு பயன் : பருத்தி,எள்,கடலைக்கு பாதிப்பு

துணை மின்நிலையம் அமைக்கும் பணியை விரைவுபடுத்த கோரிக்கை

பாரீஸ் ஒலிம்பிக்: சரத், மனிகா தலைமையில் இந்திய அணிகள்

SCROLL FOR NEXT