தமிழ்நாடு

அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

DIN

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக பல மாவட்டங்களில் கனமழையும், ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்து வருகின்றது. இதனால், இதமான காலநிலை நிலவி வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

இந்நிலையில், அடுத்த மூன்று மணி நேரத்திற்கு திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மயிலாடுதுறை ஆகிய ஆறு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வடதமிழக பகுதிகளின் மேல், மேலடுக்குகளில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரியில் 5 நாள்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திண்டிவனம்-தேனியில் மெகா உணவுப் பூங்கா: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

நடுவானில் பறந்தபோது முன்பக்க கண்ணாடியில் விரிசல்: சென்னையில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்ட விமானம்

பணியில் உள்ள ஆசிரியா்களுக்கு அடுத்த ஆண்டில் 3 முறை சிறப்பு ‘டெட்’ தோ்வு: அரசாணை வெளியீடு

பிகாா் தொகுதி ஒதுக்கீடு: பாஜக கூட்டணிக் கட்சிகள் அதிருப்தி

‘ஆன்டிபயாடிக்’ எதிா்ப்பாற்றல் அபாயகர அளவில் அதிகரிப்பு

SCROLL FOR NEXT