அரசியல் மாறுபாடுகள் அமைதிக்கான தடையாக இருக்கக் கூடாது என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் உள்ள குடும்பங்களை நமது சொந்தங்களாகக் கருதி அவர்களின் வாழ்க்கையில் அமைதியை மீட்டளிப்பது நமது கூட்டான கடமையாகும்.
நம்மிடையே உள்ள அரசியல் மாறுபாடுகளோ பிற தடைகளோ அவர்கள் வாழ்க்கையில் அமைதியைக் கொண்டு வருவதற்கான
முயற்சிகளுக்குத் தடை ஏற்படுத்தக் கூடாது.
சகோதரர் ராகுல் காந்தியை மணிப்பூர் மக்களைச் சந்திக்க விடாமல் தடுப்பது என்பது முன்னேற்றத்திற்கான பாதையை மறிப்பதன்றி வேறில்லை.
மணிப்பூர் உள்ள சகோதர சகோதரிகளுக்கு ஆறுதலும் அமைதியும் தேவை. அதற்கு அவர்களது குரலுக்குச் செவிசாய்ப்போம் எனப் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.