முகப்பு
தமிழ்நாடு

தில்லியில் கனமழை: கடும் போக்குவரத்து நெரிசல்

தலைநகர் தில்லியில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், இன்று காலை  முதல் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:14 PM
பகிர்:

தலைநகர் தில்லியில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், இன்று காலை  முதல் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கனமழையால் ஆங்காங்கே வெள்ள நீர் தேங்கியுள்ளது. பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். 

இதுதொடர்பாக போக்குவரத்து காவலர் ஒருவர் கூறுகையில், 

ஜாமியா மெட்ரோ நிலையம் அருகே தண்ணீர் தேங்கி இருப்பதாக புகார் வந்தது. அதனைத்  தொடர்ந்து சாராய் காலே கான், ரிங் சாலை, கீதா காலனி, அக்ஷர்தாம் கோவிலுக்கு செல்லும் பகுதி என  தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளிலிருந்து தொடர்ந்து புகார்கள் வந்து குவிந்தது. மேலும், மத்திய தில்லியின்  காளி பாரி மார்க் பகுதியில் பலத்த மழையால் ஒரு மரம் வேரோடு சாய்ந்தது.

இதனால்,  சராய்காலே கான், ரிங் சாலை, கீதா காலனி, அக்ஷர்தாம் கோவிலுக்கு செல்லும் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் ஆமை வேகத்தில் நகர்ந்தன. மேலும் அந்த பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது. 

தில்லியின் சில பகுதிகளில் மிதமான மழையும் ஒரு சில பகுதிகளில் பலத்த மழையும் பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →