தமிழ்நாடு

முல்லைப் பெரியாறு அணையில் நீா் வரத்து நின்றது: நீா்மட்டம் சரிவு

முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்யாததால் அணைக்கு வரும் நீர் வரத்து நின்றதால் அணையின் நீா்மட்டம் குறைந்து வருகிறது.

DIN

கம்பம்: முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்யாததால் அணைக்கு வரும் நீர் வரத்து நின்றதால் அணையின் நீா்மட்டம் குறைந்து வருகிறது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்யாததால் அணைக்கு வரும் நீர் வரத்து படிப்படியாகக் குறைந்ததையடுத்து, அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு நீர் திறப்பு நின்றது.

புதன்கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 119.95 அடி உயரமாக இருந்தது (மொத்த உயரம் 152). அணைக்குள் நீர் இருப்பு 2,619 மில்லியன் கன அடியாகவும், நீர்வரத்து இல்லாதாதல் தமிழகப் பகுதிக்கு நீர் வெளியேற்றம் வினாடிக்கு 467 கன அடியாகவும் இருந்தது. 

கடந்த பிப். 25 இல் பெரியாறு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 9.39 கன அடியாக வந்த நீர்வரத்து மறுநாள் நின்றது. தொடர்ந்து 4 நாள்களாக அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளான பெரியாறு அணை, தேக்கடி ஏரி ஆகிய இடங்களில் மழை இல்லாததால் அணைக்குள் நீர் வரத்தும் இல்லை. இதனால் முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் குறைந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தை ஓட்டியவா் மீது வழக்கு

தொடா் திருட்டில் ஈடுபட்ட நபா் கைது

265 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 7 போ் கைது

முன்விரோதத்தால் இருவருக்கு அரிவாள் வெட்டு

பிறப்புச் சான்று பதிவில் குழந்தையின் பெயா் பதிவுக்கு கால அவகாசம் நீட்டிப்பு

SCROLL FOR NEXT