முகப்பு
தமிழ்நாடு

மெட்ரோ ரயிலில் பயணச்சீட்டு பரிசோதனை என்பது இல்லை: நிர்வாகம்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பயணச்சீட்டு பரிசோதனை பணி என்பது இல்லை என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:39 AM
மெட்ரோ ரயிலில் பயணச்சீட்டு பரிசோதனை என்பது இல்லை: நிர்வாகம்
பகிர்:

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பயணச்சீட்டு பரிசோதனை பணி என்பது இல்லை என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

மெட்ரோ ரயிலில் பயணச் சீட்டு பரிசோதகர் என்ற பெயரில் சிலர் பயணிகளை தொந்தரவு செய்வதாக புகார் எழுந்த நிலையில், மெட்ரோ ரயில் நிர்வாகம் இந்த விளக்கத்தை அளித்திருக்கிறது.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பயணச்சீட்டு பரிசோதனை பணி என்பது இல்லை. எனவே, மெட்ரோ ரயில் நிலையங்களில் பரிசோதகர் என்ற பெயரில் செயல்படும் நபர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

பயண அட்டை, க்யூஆர் கோடு, டோக்கன் ஆகியவை, மெட்ரோ ரயில் நிலையங்களில் இயங்கும் தானியங்கி பயணச்சீட்டு பரிசோதனை கருவிகள் மூலம் மட்டுமே பரிசோதிக்கப்படும். பயணச் சீட்டுகளை பரிசோதிக்க வேறு எந்த நபர்களும் பணியமர்த்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →