மெட்ரோ ரயிலில் பயணச்சீட்டு பரிசோதனை என்பது இல்லை: நிர்வாகம்
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பயணச்சீட்டு பரிசோதனை பணி என்பது இல்லை என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பயணச்சீட்டு பரிசோதனை பணி என்பது இல்லை என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
மெட்ரோ ரயிலில் பயணச் சீட்டு பரிசோதகர் என்ற பெயரில் சிலர் பயணிகளை தொந்தரவு செய்வதாக புகார் எழுந்த நிலையில், மெட்ரோ ரயில் நிர்வாகம் இந்த விளக்கத்தை அளித்திருக்கிறது.
இதையும் படிக்க.. காணாமல் போகும் கடற்கரைகள்: பேராசைக்குக் கிடைக்கும் பரிசு!
இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பயணச்சீட்டு பரிசோதனை பணி என்பது இல்லை. எனவே, மெட்ரோ ரயில் நிலையங்களில் பரிசோதகர் என்ற பெயரில் செயல்படும் நபர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதையும் படிக்க.. சைபர் குற்றங்களிலும் 'பொன்னான நேரம்' முக்கியம்: மக்களே எச்சரிக்கை
பயண அட்டை, க்யூஆர் கோடு, டோக்கன் ஆகியவை, மெட்ரோ ரயில் நிலையங்களில் இயங்கும் தானியங்கி பயணச்சீட்டு பரிசோதனை கருவிகள் மூலம் மட்டுமே பரிசோதிக்கப்படும். பயணச் சீட்டுகளை பரிசோதிக்க வேறு எந்த நபர்களும் பணியமர்த்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.