முகப்பு
தமிழ்நாடு

மின் வேலியில் சிக்கி மூதாட்டி பலி

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே மின் வேலியில் சிக்கிமூதாட்டி உயிரிழந்தது குறித்து புதுப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:39 AM
கோப்புப்படம்
பகிர்:

நெய்வேலி: கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே மின் வேலியில் சிக்கி
மூதாட்டி உயிரிழந்தது குறித்து புதுப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பண்ருட்டி வட்டம், மனம்தவிழ்ந்தபுத்தூர் காலனியில் வசித்து வந்தவர் சேட்டு மனைவி தனலட்சுமி(65). இவர், சனிக்கிழமை காலை வயல் வேலைக்கு புறப்பட்டுச் சென்றார்.

பொன்னங்குப்பம் கிராமம், மண்ணாங்கட்டி மகன் சுப்புராயன்(60) என்பவரது நிலத்தின் வழியாகச் சென்றபோது காட்டுப்பன்றிக்காக வைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி தனலட்சுமி உயிரிழந்தார்.

இதை அறிந்த சுப்புராயன், இறந்து கிடந்த தனலட்சுமி உடலை அருகில் இருந்த செங்கல் சூளை அருகே கிடத்திவிட்டு, காட்டுப்பன்றி தாக்கியதில் இறந்து விட்டதாகக் கூறி சென்றுவிட்டார்.

தகவல் அறிந்த உறவினர்கள் சுமார் 50 பேர் செங்கல் சூளை அருகே ஒன்று திரண்டனர். அவர்கள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர்.

போலீசார் அவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்து, சடலத்தை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →