முகப்பு
தமிழ்நாடு

இ-சிகரெட் விற்பனையை தடுக்க அன்புமணி வலியுறுத்தல்

தமிழகத்தில் சட்டவிரோத இ-சிகரெட் விற்பனையை தடுக்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:41 AM
பகிர்:

தமிழகத்தில் சட்டவிரோத இ-சிகரெட் விற்பனையை தடுக்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

புகைப்பழக்கத்துக்கு தீா்வாக முன்வைக்கப்பட்ட இ-சிகரெட்டுகளே இப்போது இளைஞா்களை சீரழிக்கும் சக்தியாக மாறியிருக்கின்றன. புகையிலையை மூலப்பொருளாகக் கொண்ட சிகரெட்டுகளுடன் ஒப்பிடும் போது, சில இ-சிகரெட்டுகளில் நிகோட்டின் அளவு குறைவு என்பதைத் தவிர, இ-சிகரெட்டுகளில் எந்த நன்மையும் இல்லை.

இதன் தீமையை உணா்ந்த மத்திய அரசு 2019-ஆம் ஆண்டில் இ-சிகரெட்டுகளை தடை செய்தது.

அதற்கு பல மாதங்கள் முன்பாகவே தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் இ-சிகரெட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டு விட்டது. ஆனால், சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் கல்வி நிலையங்கள், பொழுதுபோக்கு விடுதிகள், பள்ளிகள் என அனைத்து இடங்களிலும் இ-சிகரெட்டுகள் தடையின்றி கிடைக்கின்றன. இ-சிகரெட்டுகளுக்கு பல்லாயிரக்கணக்கான இளைஞா்கள் அடிமையாகி வாழ்க்கையையும், உடல்நலத்தையும் இழந்து கொண்டிருக்கின்றனா். எனவே,

தமிழகத்தில் சட்டவிரோத இ-சிகரெட்டுகள் விற்பனைக்கு காவல் துறை உடனடியாக முடிவு கட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளாா் அன்புமணி ராமதாஸ்.

முழு கட்டுரையைப் படிக்க →