போட்டியின்றித் தேர்வாகிறாரா இபிஎஸ்? மார்ச் 10ல் அதிமுக தலைமை நிர்வாகிகள் குழு கூட்டம்
வருகிற மார்ச் 10 ஆம் தேதி அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது
வருகிற மார்ச் 10 ஆம் தேதி அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் இடையே கருத்து வேறுபாட்டினால் கட்சியினர் இரண்டு அணிகளாகப் பிரிந்துள்ளனர். எனினும் மூத்த நிர்வாகிகள் பலரும் பழனிசாமிக்கு ஆதரவளிப்பதாக கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அதிமுகவில் வருகிற மார்ச் 9 ஆம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து மார்ச் 10 ஆம் தேதி அதிமுக தலைமை நிர்வாகிகள் குழு ஆலோசனை நடத்தவுள்ளது.
இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஆக்குவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.