அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!
சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியுள்ளது.
சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்களுடனும் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடத்துவது, பாஜக - அதிமுக இடையே ஏற்பட்டுள்ள பிரச்னை குறித்து ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி எடப்பாடி பழனிசாமி வசம் அதிமுக வந்தபிறகு நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும்.
தொடர்ந்து நாளை காலை தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற பிறகு அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.