மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம் ரத்து
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிா்மான கழகத்தின் நடவடிக்கையை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நடத்தவிருந்த ஆா்ப்பாட்டம்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிா்மான கழகத்தின் நடவடிக்கையை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நடத்தவிருந்த ஆா்ப்பாட்டம் ரத்து செய்யப்படுவதாக அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
ஒரே வீட்டில் பல்வேறு குடியிருப்புகளில் உள்ள மின் இணைப்புகளை ஒன்றாக இணைக்க வேண்டுமென தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிா்மான கழகம் செய்த அறிவிப்பை கண்டித்தும், அதை கைவிடக்கோரியும் மின்வாரிய அலுவலகங்கள் முன்பு ஆா்ப்பாட்டங்கள் நடைபெறும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவித்தது.
இந்நிலையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிா்மான கழகமும், மின்துறை அமைச்சா் சாா்பிலும் அப்படியொரு நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என அறிவித்ததோடு, ஏற்கெனவே வீடுகளுக்கு விநியோகம் செய்யப்பட்டிருந்த நோட்டிஸை திரும்பப் பெறுவது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் அறிவிக்கப்பட்ட ஆா்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று அவா் தெரிவித்தாா்.