தமிழ்நாடு

முதல்வர் ஆசையில் கட்சித் தொடங்கியவர்கள்: மு.க. ஸ்டாலின் பேச்சு

DIN

கோவை: முதல்வர் ஆசையில் சிலர் கட்சித் தொடங்கினார்கள். அடுத்த முதல்வர் நான்தான் எனக் கூறி கட்சித் தொடங்கிய சிலர் தற்போது அனாதையாக உள்ளனர் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

கோவையில் இன்று மாற்றுக் கட்சியினர்  திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தேர்தலில் போட்டியிட அல்ல மக்கள்  பணியாற்ற தோற்றுவிக்கப்பட்ட இயக்கம் திமுக. இந்திரா காந்தி காலத்தில் எமர்ஜென்சியை எதிர்த்ததால் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்ததாகக் கூறி 1991ஆம் ஆட்சி மீண்டும் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.

தற்போது மதம், சாதி மூலம் சிலர் தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி திமுக ஆட்சியைக் கலைக்கப் பார்க்கிறார்கள் என்று தமிழக முதல்வர் குற்றம்சாட்டினார்.

மேலும் அவர்  பேசுகையில், நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியடை இன்றே களமிறங்குங்கள்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு நாடும் நமதே, நாளையும் நமதே என்ற உறுதியுடன், 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற உறுதியுடன் இன்றே தேர்தல் பணியில் களமிறங்குங்கள்.

சென்றமுறை 39 தொகுதிகளில் வென்றோம், இந்த முறை மொத்தமாக 40 தொகுதிகளையும் வெல்ல வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராலிமலையில் ஒரே நாளில் 98 மி.மீ. மழை பதிவு!

வாசுதேவநல்லூர் அருகே அரசுப் பேருந்து மீது கல்வீச்சு

விழுப்புரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சோதனை: கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

தஞ்சையில் நள்ளிரவில் வக்கீல் குமாஸ்தா வெட்டிக் கொலை!

கொடைக்கானலில் தொடர் மழை: படகுப் போட்டி ரத்து!

SCROLL FOR NEXT