வடமாநில தொழிலாளர் குறித்து அவதூறாக பேசிய விடியோ வெளியான விவகாரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது வடமாநில தொழிலாளர் குறித்து சீமான் அவதூறாக பேசியதாக அரசியல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர் விடியோ பகிர்ந்திருந்தார்.
ஹிந்தி பேசும் வடமாநில தொழிலாளர்கள் மீது வெளிப்படையாக வன்முறை தூண்டப்படுகிறது. இப்படி வன்முறையைத் தூண்டும் சீமான் போன்றவர்கள் மீது ஏன் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என விடியோவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், சீமான் மீது வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு கருங்கல்பாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.