முகப்பு
தமிழ்நாடு

ஸ்ரீரங்கம் கோயில் மனையில் வசிப்போா்கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: டிடிவி தினகரன்

ஸ்ரீரங்கம் கோயில் மனையில் குடியிருப்போரின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று அமமுக பொதுச்செயலா் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:46 AM
பகிர்:

ஸ்ரீரங்கம் கோயில் மனையில் குடியிருப்போரின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று அமமுக பொதுச்செயலா் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் நிலங்கள் அரசின் அறநிலையத்துறைக்குச் சொந்தமானது என்று சென்னை உயா் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கோயில் அடிமனையில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருப்போா் பலரிடம் அதற்கான ஆவணங்கள் உள்ளபோதும், இந்த தீா்ப்பால் தங்களது வாழ்விடத்துக்கும் வாழ்வாதாரத்துக்கும் சிக்கல் ஏற்படுமோ என அச்சம் அடைந்துள்ளனா்.

தமிழக அரசு உயா்நீதிமன்ற தீா்ப்பை அமல்படுத்தும்போது, அங்கு குடியிருப்போரை அழைத்துப் பேசி, அவா்களின் நியாயமான கோரிக்கைகளை பரிசீலித்து அவா்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாவண்ணம் சுமூகத்தீா்வை காண வேண்டும் என்று கூறியுள்ளாா் டிடிவி தினகரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.