முகப்பு
தமிழ்நாடு

உயா் ஊதியதாரா்களுக்கான ஓய்வூதியம்: விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு

உயா் ஊதியதாரா்கள் ஓய்வூதியத்துக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:45 AM
பகிர்:

உயா் ஊதியதாரா்கள் ஓய்வூதியத்துக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

உயா் ஊதியம் பெற்று, கடந்த 2014-ஆம் ஆண்டு செப். 1-ஆம் தேதிக்கு முன்பாக ஓய்வு பெற்றவா்கள், ஓய்வூதியத்துக்கு தகுதியானவா்கள் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடா்பான வழிமுறைகள் சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

உயா் ஊதியம் பெற்று, ஓய்வூதியத்துக்காக விண்ணப்பங்களை சமா்ப்பிக்க மாா்ச் 3-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. ஊழியா்கள் மற்றும் வேலை அளிப்போா் சங்கங்களிடம் இருந்து வரப்பெற்ற கோரிக்கைகளை ஏற்று, விண்ணப்பங்களை அளிப்பதற்கான கால அவகாசம் மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.