மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!
தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வருகிறது.
மேட்டூர்: தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வருகிறது.
நேற்று முன்தினம் காலை வினாடிக்கு 1,075கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 3,980கன அடியாகவும் இன்று காலை வினாடிக்கு 6,700கன அடியாகவும் அதிகரித்துள்ளது.
நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் நேற்று முன் தினம் 101.16அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 101.62அடியாக உயர்ந்துள்ளது.
கடந்த இரண்டு நாள்களில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 0.46அடி உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைகளுக்காக வினாடிக்கு 1,500கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
அணையின் நீர் இருப்பு 66. 95 டிஎம்சியாக உள்ளது.